Wednesday, February 19, 2025

அமைச்சர் கே.என்.நேருவுடன் S.H.அஸ்லம் சந்திப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சில அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்தி ஆயிஷாவின் வார்டை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில், 2வது வார்டுக்கு சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரையுடன் நேரில் சந்தித்து அஸ்லம் மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஜக்காத் குறித்து ஏதேனும் சந்தேகமா? கவலையை விடுங்க, கருத்தரங்கம் வாங்க..!

இன்னும் ஓரிரு வாரங்களில் இஸ்லாமியர்களின் சங்கை மிகுந்த ரமலான் மாதம் வரவுள்ளது. இந்த ரமலான் மாதத்தில் அதிகப்படியான நல்லறங்களை செய்ய அகிலத்தின் இறுதி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான. அப்துல் காதர் அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img