அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார். நகர்மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே சில அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்தி ஆயிஷாவின் வார்டை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இந்தநிலையில், 2வது வார்டுக்கு சாலை, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரையுடன் நேரில் சந்தித்து அஸ்லம் மனு அளித்துள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவாக நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் தொடங்கிய “நிழல்” யுத்தம். – நிஜம் யாருக்கு?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தஞ்சை மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான பட்டுக்கோட்டையில் திமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே 'சீட்'...

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகம்...
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் கடந்த 1980ம் ஆண்டு முதல் இயங்கி சேவையாற்றி வருகிறது. அந்த வகையில் தீனுல்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...





