Wednesday, February 19, 2025

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக நவாஸ்கனி எம்பி தேர்வு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ரஹ்மான், வக்ஃப் வாரிய தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

இதனிடையே தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகத்தில் இன்று 19/09/2024 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி எம்பி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக வக்ஃப் வாரிய உறுப்பினர்களுடன் சென்ற அதன் தலைவர் நவாஸ்கனி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். வக்ஃப் வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ்கனிக்கு, அத்துறையின் அமைச்சர் செஞ்சி மஸ்தான், வக்ஃப் வாரிய உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய...

அதிரையில் நடப்பது அரசு விழாவா? கட்சி விழாவா? குழப்பத்தில் கூட்டணி கட்சிகள்!

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களில், கூட்டணி கட்சிகளுக்கு அழப்பிதழ் இல்லை என்றும் அரசு இலட்ச்சினையுடன் வெளியாகும் அழைப்பிதழை பார்த்துதான் விழா...
spot_imgspot_imgspot_imgspot_img