கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து வந்தது. பலமுனை முயற்சிகளுக்குப் பிறகு வருகிற 02/10/2024 தேதியிலிருந்து சவுதியா விமான சேவை சென்னையிலிருந்து ஜித்தாவிற்குத் தொடங்குகிறது.அதன் சிறப்பு நிகழ்ச்சி நேற்று 23/09/2024 சவுதி அரேபியாவின் 94வது தேசிய நாள் என்பதால் சென்னை தேனாம்பேட்டையில் அமையப் பெற்றுள்ள சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை 11:30 மணிக்கு கேக் வெட்டி, இனிப்பு வழங்கி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், அலுவலர்கள், பல்வேறு டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள், வணிகப் பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர். வாரந்தோறும் திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்களில் சென்னை-ஜித்தா விமான சேவை தொடக்கம் பெறுகிறது. வாரத்தில் மூன்று நாட்களாவது ஜித்தாவிற்கு இது இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா ஏர்லைன்ஸ்..!!
More like this
அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பட்டுக்கோட்டை துணை மின் நிலைய...
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு...