Friday, January 23, 2026

குப்பைகளை அள்ளாதே – அதிரை நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு உத்தரவா?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மின்சார ஒயர்களில் உராய்ந்து கொண்டிருந்த மரக்கிளைகள் கம்பங்களுக்கு இடையூறு செய்த மரங்கள் என அதிரையின் பல பகுதிகளிலும் மின் வாரிய ஊழியர்களால் வெட்டி சாய்க்கப்பட்டது.

இந்த மரக்கிளைகள் எங்கு வெட்டப்பட்டதோ அங்கேயே குவிக்கப்பட்டு கிடக்கின்றது.

குறிப்பாக மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளான கடைத்தெரு பெண்கள் பள்ளி, நடுத்தெரு, மேலத்தெரு புதுமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் அப்படியே கிடைக்கிறது.

தினமும் வரும் துப்புரவு தொழிலாளர்களிடம் அப்புறப்படுத்த கோரினால் சார் இதெல்லாம் நாங்க அள்ள கூடாதாம், நாங்க என்ன சார் பன்னுறது? என கையை விரிக்கிறார்கள்.

காதிர்முகைதீன் பெண்கள் பள்ளிக்கூடம் அருகே குவிக்கப்பட்ட மரக்கழிவுகளில் இருந்து விஷ ஜந்துக்கள் நடமாடுவதாக மாணவிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் அதிரை நகரில் கொட்டப்பட்டுள்ள மரக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img