Monday, January 20, 2025

அதிரை: எல்லாமே பூஜைக்கு அப்புறம்தான்- நீரில் மிதக்கும் பகுதியை மீட்க சாக்கு போக்கு சொல்லும் அதிரை நகராட்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தோப்புக்காடு பகுதியில் உயரமாக அமைக்கப்பட்ட தார்சாலையால் ஒரு வீட்டிற்குள் புகுந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது என மனிதநேய ஜனநாயக கட்சியின் அதிரை பேரிடர் குழுவிற்கு தகவல் கிடைத்திருக்கிறது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற அக்குழுவினர், சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரின் கணவர் ராஜாவை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக மஜகவினர் கூறியுள்ளனர் அப்போது இன்று மாலை 5மணிக்குள் நீரை அகற்றி தருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் நகராட்சி அலுவலகத்திலிருந்து மஜக பேரிடர் மீட்பு குழுவிற்கு போன் சென்றுள்ளன மறுமுனையில் பேசிய நபர் தாம் நகராட்சியில் இருந்து பேசுவதாகவும், தண்ணீரை உறிஞ்சும் ஜெட்ராய்டு இயந்திரம் புதிதாக வாங்கப்பட்டு உள்ள நிலையில் பூஜை போடாமல் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் கடுப்பான மஜக குழுவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர், முன்னதாக RI மற்றும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மஜகவினர் மேற்குறிப்பிட்டுள்ள புகார் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இருந்தனர்.

அதிகாரிகளும் இன்று மாலைக்குள் வீட்டிற்குள் புகுந்துள்ள நீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருந்த நிலையில்,திடீரென பல்டியடித்த நகராட்சியை கண்டித்து மஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் நாளை காலை 6:30மணிக்குள் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட ஜெட்ராய்டு இயந்திரத்தை பூஜை புணஸ்க்காரம் எல்லாம் போடுவது ஒருபக்கம் இருந்தாலும், மக்களே மரண குழிக்குள் செல்லும் நிலையை கவனத்தில் கொண்டு எவ்வித ஆட்சோபனையுமின்றி பணிக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளன.

CMPலைனில் நீர் வராத வாய்க்காலை தூர் வாரியதில் உள்ள அக்கறையை தோப்புகாட்டில் காட்டியிருந்தால் நகராட்சிக்கு ஒரு சபாஷ் போட்டு இருக்கலாம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img