Wednesday, February 19, 2025

தொடரும் தெரு நாய்களின் தொல்லை : அலட்சியத்தில் அதிரை நகராட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் சமீபகாலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகம் நிறைந்து காணப்படுகிறது. முக்கிய வீதிகளில் கூட்டமாக உலாவித் திரியும் இந்த தெரு நாய்களின் தாக்குதல் தொல்லையால் சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள் வெளியே சென்று வர மிகவும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். 

மாலை நேரங்களில் தெருக்களில் விளையாடும் சிறுவர் சிறுமிகளை தெருவில் உலா வரும் நாய்கள் சுற்றி வளைத்து தாக்குவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதுகுறித்து ஒரு சில பொதுமக்கள் பலமுறை நகராட்சிக்கு நேரில் சென்று எடுத்து கூறியும் நகராட்சி நிர்வாகத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் அதிரை, பேரூராட்சியாக இருந்த போது இது போன்ற நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் அவ்வப்போது கண்டறிந்து சரி செய்து வந்த நிலையில், தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டவுடன் இது போன்ற அடிப்படை நடவடிக்கைகளில் அதிரை நகராட்சி மெத்தனப்போக்கை கையாள்வது முகசுளிப்பை ஏற்படுத்துவதாக அதிரை மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...
spot_imgspot_imgspot_imgspot_img