தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் C. V. சேகரின் ஆணைக்கிணங்க பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.சி.எம்.எம்.சி முருகானந்த், தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஏ.ஆர் அலெக்ஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தாம்ராங்கோட்டை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நினைவஞ்சலி செலுத்தினார்கள். இதில் கிளை கழகச் செயலாளர்கள் R. D. சேக்கிழார் E. S. அசோக் குமார் மற்றும் v. ஜெயன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்







