Tuesday, March 10, 2026

அதிரையில் சாலை விழிப்புணர்வு பேரணி – ரோட்டரி சங்கம் நடத்தியது !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போலியோ நோயில் இருந்து மக்களை காக்கும் திட்டத்தை தொடங்கி வெற்றி கண்டுள்ளது.

மேலும் சாலை பாதுகாப்பு, மருத்துவம்,கல்வி உள்ளிட்ட பயனுள்ள திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்கள்.

அதன்படி அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று நகராட்சியில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி புறப்பட்டது.

இந்த பேரணியானது சேதுரோடு காலேஜ் முக்கம் தக்வாபள்ளி கடைதெரு போஸ்டாபிஸ் தெரு வழியாக சென்று பேருந்து நிலையத்தை அடைந்தது.

முன்னதாக இப்பேரணியை, பட்டுக்கோட்டை காவல் துணை கண்கானிப்பாளர் ரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர்,அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட நகராட்சி தலைவர்,துணைத்தலைவர்,ஆணையர் மதன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு காதிர்முகைதீன் பள்ளி,மற்றும் இமாம் ஷாஃபி பள்ளியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img