அதிரை இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு எழுவர் கால்பந்து தொடர் போட்டி ஆண்டுதோறும் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
இதில் மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகள் பங்கேற்று விளையாடும்.
அந்த வகையில் அதிரையர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆண்டுக்கான இளைஞர் கால்பந்து கழகம் மற்றும் SSM குல்முகம்மது நினைவு 29-ம் ஆண்டு எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகின்ற 09/05/2025 மாலை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெறுகிறது.
அதுசமயம், கால்பந்தாட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கால்பந்து கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு:
+918015954462