Saturday, April 19, 2025

சாலைகளில்   சுற்றித்திரியும் கால்நடைகள் – ரூ.10ஆயிரம் அபராதம்

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கான அபராதத்தொகை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை சாலையில் மேய விடும் உரிமையாளர்களிடம் இந்த அபராதத்தொகை வசூலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில் நடைபெற்ற சிறப்பு மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி ஜனவரி 1-ம் தேதி முதல் இந்த புதிய அபராதத்தொகை அமலுக்கு வந்திருக்கிறது.

இதன்படி, சாலைகளில் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் காதில் வரிசை எண் கொண்ட புதிய டோக்கன் இணைக்கப்படும் என்றும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், பராமரிப்புத் தொகையாக 750 ரூபாயும் செலுத்தி உரிமையாளர் அவற்றை அழைத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2-வது முறையாக மீண்டும் அதே கால்நடைகள் சாலையில் பிடிபட்டால், அவை உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்றும், அதற்கு பதிலாக அவை புளூகிராஸ் போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பு, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள், அதன் உரிமையாளர்களிடம் 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, கால்நடைகளை திரும்ப ஒப்படைத்தனர். தற்போது அபராதத்தொகை பல மடங்கு உயர்ந்திருப்பதோடு, பறிமுதல் நடவடிக்கையையும் மேற்கொள்ள மாநகராட்சியின் புதிய தீர்மானம் வழிவகை செய்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...
spot_imgspot_imgspot_imgspot_img