Friday, April 17, 2026

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

spot_imgspot_imgspot_imgspot_img

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி அமைக்க வேண்டும் என திமுக மேற்கு நகர செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான SH அஸ்லம்  மின்வாரிய உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“ரமலான் மாதம் என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மிக முக்கியமான ஆன்மிக காலமாகும். அதிகாலை சஹர் உணவு தயாரிப்பும், மாலை நோன்பு திறக்கும் நேரத்திலும் மின்சாரம் மிக அவசியமான ஒன்று. குறிப்பாக சிறிய குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் வசிக்கும் வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் பெரும் அசெளகரியம் உருவாகும்.


மேலும், பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகைகள், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட மத நிகழ்ச்சிகளும் மின்சாரத்தை சார்ந்தே நடைபெறுகின்றன. இந்நிலையில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.”
எனவே, பொதுமக்களின் உணர்வுகளை மதித்து, ரமலான் மாதத்தின் முதல் நாளில் நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணியை மாற்றி, மாற்று தேதியில் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


இந்த கோரிக்கையை மின்வாரிய அதிகாரிகள் சாதகமாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உங்கள் பட்ஜெட்டில் அழகிய வீட்டு மனை: அதிரை ECR-ல் விற்பனைக்குத் தயார்!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலை (ECR)...

பட்டுக்கோட்டை திமுக வேட்பாளரிடம் அதிரை TIYA சங்கம் மனு: 6 முக்கிய...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்  (TIYA)...

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...
spot_imgspot_imgspot_imgspot_img