Home » பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!

பேரிகார்டை இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன்… புத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்!!!

0 comment

சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடத்துவதை போலீஸார் கண்காணித்து வந்தனர். எனினும் அவர்களையும் மீறி சில இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டனர்.

சென்னை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 3 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மேம்பாலத்தில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக போலீஸார் பேரிகார்டை வைத்து தடுத்திருந்தனர். அப்போது அந்த பேரிகார்டை பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் இழுத்து சென்றார். அப்போது சாலையில் தீப்பொறிக்கும் வகையில் நெஞ்சை பதைபதைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை வீடியோவாக எடுத்து தம்பட்டம் அடித்து கொண்டார். இதையடுத்து போலீஸார் 3 பேரை கைது செய்தனர். இதில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறுகையில் பேரிகார்டை தீப்பொறி பறக்க இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன். இப்போதுதான் இதனால் பொதுமக்கள் எத்தகைய இன்னலை சந்தித்திருப்பர் என்பது தெரிந்தது. இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter