அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர இயங்குவதில்லை என்றும், விளக்குகளை அப்பகுதி மக்களே கையாள்வதற்கேற்ற வகையில் Timer main switch ஏற்படுத்தி தரவேண்டும்.மேலும் கடற்கரைத் தெரு பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே நடந்து செல்கின்றனர். ஆகவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையை அணுகி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனு கொடுக்கும் போது கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நறபணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் உடனிருந்தனர்
கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!
228