Friday, March 29, 2024

மாவட்ட அளவில் நடைபெற்ற ”யங் இராமனுஜம்” கணிதப் போட்டியில் முதலிடத்தை வென்ற பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி!!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை, தாம்பரம் – படப்பையில் அமைந்துள்ள தானிஷ் அஹ்மது இஞ்சினியரிங் கல்லூரியின் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பனிரெண்டாம் வகுப்பு கணித பிரிவு மாணவர்களுக்கு ” யங் இராமானுஜம் ” என்ற திட்டத்தின் கீழ் கணித பாட தேர்வு நடத்தப்பட்டது.

சுமார் 4000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அந்தந்த பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சிறப்பு சான்றிதழும் , பதக்கமும் வழங்கப்பட்டன.

தேர்வு எழுதிய 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவிகளில் மாவட்ட அளவில் முதல் முதலிடத்தை , பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவி சுரேகாவும், இரண்டாம் இடத்தை , திருவோணம் நவீனா மேல்நிலை பள்ளி மாணவி தமிழரசியும், மூன்றாம் இடத்தை , மதுக்கூர் விக்ரமம் காந்தி மெட்ரிக் பள்ளி மாணவி ரக்‌ஷனாவும் பெற்றனர்.

இவர்களுக்கு கல்லூரியின் முதல்வர் திரு.மூஸா மற்றும் கல்லூரியின் செயலர் திரு.காதர் ஷா , மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ரஜினி இவர்களின் வாழ்த்துக்களுடன் கல்லூரியின் பேராசிரியர் கோபி மற்றும் ஒருங்கினைப்பாளர் யஹ்யா ஆகியோர் சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்த தேர்வு எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது என பள்ளி தலைமை ஆசிரியர்கள், கணித ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் நெகிழ்ச்சியோடு கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...