- இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை, கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோல் விலை 13 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.02 ஆகவும், டீசலின் விலை 19 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.65.42 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.