Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணத்தில் அரசு பொது மருத்துவமனை நிறைவேறுமா மக்களின் கோரிக்கை!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு பொது மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்.

மல்லிப்பட்டிணத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த கடற்படையை இரண்டாண்டுகளுக்கு முன் திரும்ப பெற்றது. கடற்படையினர் காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றனர்.இதனால் அந்த கட்டிடம் எந்தவித பயன்பாடும் பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் சிறிய விபத்துகள் முதல் பெரிய விபத்துகள் வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.உடனடி மருத்துவ உதவியோ அல்லது முதலுதவியோ பெறுவதாக இருந்தால் 20 கிலோ மீட்டருக்கு மேல் சென்றால் தான் மருந்துவ உதவி பெறவேண்டிய சூழல் உள்ளது.இதனால் கொண்டு செல்லக்கூடிய மிகவும் அபாயகரமான கட்டத்தை அடைந்துவிடுகிறார்கள்.மேலும் மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் வந்து செல்லும் முக்கிய கடல்பகுதியாகும்,சுற்றுலா பகுதியாகவும் இருக்கிறது.

நன்கு விசாலமான பரப்பளவைக் கொண்ட நிலப்பரப்பு,கட்டிட வசதி மற்றும் இன்ன பிற வசதிகளையும் ஒருங்கே பெற்று வடிவமைக்கப்பட்டு கட்டிய கட்டடங்கள் என்பதால் கடற்படை இயங்கி வந்த கட்டிடத்தை அரசு மருத்துவனையாக மாற்றி தரவேண்டும் என்பது பொதுமக்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...