Monday, January 20, 2025

புதுமனைத் தெருவை புறக்கணிக்கும் அதிரை பேரூர் நிர்வாகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை புதுமனைத் தெரு 19வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமைந்திருக்கும் உட்புற பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தெரு மின் விளக்குகள் ஆங்காங்கே பழுதாகி கும்மிருட்டாக காட்சியளித்து வருகிறது. இதனால் அப்பகுதில் தொழுகைக்கு செல்பவர்கள், முதியோர்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதிரையில் இப்படிப்பட்ட இந்த இருள் சூழ்ந்த இடங்களை சில வக்கிரவாதிகள்  பயன்படுத்திக் கொண்டு சில பல திருட்டு சம்பவங்களிலும், சில்மிஷங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை உடனடியாக தடுப்பதற்கு தெருவினுள் ஆங்காங்கே பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை அதிரை பேரூர் நிர்வாகம்  சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அலட்ச்சியப் போக்கை கடைபிடித்து வரும் அதிரை பேரூர் நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா அல்லது வழக்கம் போல் கண்களை திறந்துக் கொண்டு தூங்குமா என்பதனை பொறுத்திருந்து பாப்போம்..

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் மமக கொடியேற்றம் !

மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் பகுதிகளில் கட்சி...

அதிரையில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், வாக்காளர்கள் கலந்தாய்வு கூட்டம் !

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 9,10.20 ஆகிய வார்டுகளில் மேம்பாட்டு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் MMS வாடியில் நகர்மன்ற தலைவர் MMSதாஹிரா அம்மாள்...

அல்ஃபாசி மொய்தீன் வஃபாத் !

அதிராம்பட்டினம் ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹும் A-Z அப்துல் லத்தீஃப் அவர்களின் மகனும்,அபுல் ஹசன்,உமர் இவர்களின் சகோதரரும் ,மர்ஹும் அப்துல் சலாம் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img