Tuesday, March 10, 2026

புதுமனைத் தெருவை புறக்கணிக்கும் அதிரை பேரூர் நிர்வாகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை புதுமனைத் தெரு 19வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமைந்திருக்கும் உட்புற பகுதியில் கடந்த சில வாரங்களாகவே தெரு மின் விளக்குகள் ஆங்காங்கே பழுதாகி கும்மிருட்டாக காட்சியளித்து வருகிறது. இதனால் அப்பகுதில் தொழுகைக்கு செல்பவர்கள், முதியோர்கள், பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதிரையில் இப்படிப்பட்ட இந்த இருள் சூழ்ந்த இடங்களை சில வக்கிரவாதிகள்  பயன்படுத்திக் கொண்டு சில பல திருட்டு சம்பவங்களிலும், சில்மிஷங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை உடனடியாக தடுப்பதற்கு தெருவினுள் ஆங்காங்கே பழுதடைந்துள்ள தெரு மின் விளக்குகளை அதிரை பேரூர் நிர்வாகம்  சரி செய்து தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அலட்ச்சியப் போக்கை கடைபிடித்து வரும் அதிரை பேரூர் நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா அல்லது வழக்கம் போல் கண்களை திறந்துக் கொண்டு தூங்குமா என்பதனை பொறுத்திருந்து பாப்போம்..

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம்...

அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல்...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img