அதிரை புதுமணைத் தெரு 19 வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமையப் பெற்றிருக்கும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருளாக காட்சியளித்து சில வக்கிரவாதிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபட்டு வந்ததை கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நமது ‘அதிரை எக்ஸ்பிரஸில்’ செய்தியாக பதிவிட்டு இருந்தோம்.
இதனை செவியேற்ற அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தெருவில் பழுதடைந்த மின் விளக்குகளை சரி செய்ததனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.