Sunday, April 28, 2024

பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணி !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் ஐபிஎல்-ன் பரம வைரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணிக்கு துவக்க ஆட்டகாரர்களாக ரோஹித்- டி காக் ஜோடி களமிறங்கியது. அதிரடியாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வந்தன.

இறுதியில் 20 ஓவர் முடியில் மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் போலார்டு 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் குவித்தார். சென்னை பந்துவீச்சில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 32 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன்-டு பிளஸ்சிஸ் ஜோடி துவக்கம் தந்தது. எந்த ஒரு வீரரும் முறையாக ஆடவில்லை. எல்லாம் வருவதும் நடையை கட்டுவதுமாக இருந்தனர். வாட்சன் மட்டும் இறுதி வரை போராடி 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் தாக்கூர், மலிங்கா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 1 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக சாம்பியன் ஆகி கோப்பையை கைப்பற்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...