அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் எம். இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் பி.எம்.எஸ் அப்துல் குதா அவர்களின் மனைவியும், மர்ஹூம் நாகூர் பிச்சை, தக்வா பள்ளிவாசல் மீன் மார்க்கெட் தாஜிதீன் ஆகியோரின் தாயாரும், ஏ. அபூபைதா, ஹாஜா முகைதீன், எம். சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், அப்துல் சமது , முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோசரியும், ஏ.பி சாகுல் ஹமீது, என் நிஜாமுதீன், டி. அப்துல்லா, எஸ். அப்துல் வாஹிது ஆகியோரின் பாட்டியாவுமாகிய அதபியா அம்மாள் அவர்கள் இன்று காலை கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-02-2018) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.