Friday, April 19, 2024

தமிழக மக்களுக்கு நற்செய்தி: அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி., பஸ்களின் கட்டணத்தை குறைப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எஸ்.இ.டி.சி.,யில், 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவை, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கும் இயக்கப்படுகின்றன. அதனால் தினமும், 1.8 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. ஜன., 20 முதல், அரசு விரைவு பஸ்களின் கட்டணம், ஆம்னி பஸ்களுக்கு இணையாக உயர்த்தப்பட்டது.
இதன் காரணமாக, குடும்பத்துடன் வெளியூர் செல்வோர், ரயில், வாடகை கார்களை தேர்ந்தெடுத்தனர். கட்டண உயர்வால், தினமும் ஒரு கோடி ரூபாய் கூட வசூலாகாத நிலை ஏற்பட்டது. எனவே, கோடை விடுமுறையை கருத்தில் கொண்டும், பயணியரை தக்க வைத்துக்கொள்ளவும், கட்டணத்தை சற்று குறைக்க, அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கோடை காலத்தில் பயணியர் வருகை அதிகரிக்கும்; வருவாயும் கூடும் என்பதால், கட்டணத்தை குறைக்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...