Thursday, March 28, 2024

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மாற்றம்..!!

Share post:

Date:

- Advertisement -

 

2016-2017-ம் கல்வி ஆண்டில் பள்ளிக் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல், கணிதத்திறன் சார்ந்த கற்றல் அடைவுத்திறன், கற்றல் கற்பித்தலில் புதிய உத்தியை பயன்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளில் ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் 96 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த விழாவை கலந்துக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்களும், விடுமுறை எடுக்காமல் பணியாற்றிய 51 ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மாணவ-மாணவி நலனை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகிற கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு பள்ளிக்கூட சீருடைகள் மாற்றப்படுகிறது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு நிறத்திலும்,
6-ம் வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை வேற ஒரு நிறத்திலும்,
9 மற்றும் 10 வகுப்புகளுக்கு மற்றொரு நிறத்திலும்,
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வேற நிறத்திலும் என மொத்தம் 4 வகையாக சீருடைகள் மாற்றப்பட உள்ளது என அவர் விழாவில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...