தேவையான பொருட்கள்
கோழி – 1 கிலோ
கராம்பு – 2
பட்டை – 2
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
சோம்புத்தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- ஒன்றரை தேக்கரண்டி
மல்லித்தூள் – இரண்டு தேக்கரண்டி
முந்திரிபருப்பு – 100 கிராம்
தேங்காய்ப்பால் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 250 கிராம்
பெரியவெங்காயம் – 250 கிராம்
எண்ணெய் – 250கிராம்
செய்முறை:
முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்.
மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி, சோம்புத்தூள் ஒரு தேக்கரண்டி, மல்லித்தூள் இரண்டு தேக்கரண்டி, மிளகாய்த் தூள் ஒன்றரைதேக்கரண்டி, தேங்காய்ப்பால் , கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அதனுடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பை குறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.