அதிரையில் இன்று(20/03/2018) காலை சுமார் 11மணியளவில் தமுமுக மற்றும் SDPI கட்சி சார்பில் கண்டன போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில், SDPI கட்சி மாவட்ட Z.முஹம்மது இலியாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர்
K.பஷீர் அஹமது,
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர்
M.O.செய்யது முஹம்மது புஹாரி, தமுமுக மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா
மாவட்ட தலைவர்
A.ஹாஜா அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.