சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு சில தினங்களுக்கு முன்பு நெஞ்சி வழியால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் (20/03/2018) நடராஜன் உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து, நடராஜனின் உடல் இறுதிசடங்கிற்காக தஞ்சை கொண்டுவரப்பட்டது.
இறுதி சடங்கில் கலந்துகொள்ள மனைவி சசிகலா 15நாள் பரோலில் வெளிவந்து நேரடியாக தஞ்சை வந்தார் .
நடராஜனின் உடலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று(21/03/2018) தஞ்சையில் நேரில் சென்று ஆறுதல் தெருவித்தார்.
இவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முகமது புகாரி, மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், மாநில அமைப்பு செயலாளர் I.M. பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் மைதீன், அதிரை நகர தமுமுக & மமக தலைவர் சாஹுல் ஹமீது(சாவண்ணா) ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெருவித்தனர்.