133
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது.
நாளை காலை சுமார் 10 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடையும். அதேபோல் நாளை மதியம் 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் இருந்து ரயில் புறப்பட்டு மாலை 6 மணியளவில் காரைக்குடி சென்றடைய உள்ளது.
இந்த நேரம் நாளை ஒருநாளைக்கு மட்டும் பொருந்தும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.