Saturday, April 20, 2024

சுந்தர் பிச்சைக்கு நோட்டீஸ் – அமெரிக்கா பாராளுமன்றம்..!!

Share post:

Date:

- Advertisement -

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க், கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் ஜேக் டார்சி ஆகியோர் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் பாராளுமன்ற நீதித்துறை குழுவின் முன் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கிய விவகாரம் பூதாகாரமாய் வெடித்தது.

இதேபோல், பிரிட்டன் நாட்டில் பேஸ்புக் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றிய தகவல்களும் களவாடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் அல்லது அவரது நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி பாராளுமன்ற விசாரணை கமிட்டியின் முன்னர் ஆஜராகி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கமிட்டியின் விசாரணையில் சூக்கர்பர்க் ஆஜராக மாட்டார். அவருக்கு பதிலாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப உயரதிகாரி மைக் ஸ்குரோப்ஃபெர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source:- புன்னகை | தமிழன் எக்ஸ்பிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...