காஷ்மீரில் 8வயது சிறுமி ஆசிபா 8 நாட்கள் கோவில் கருவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,சிறுமி ஆசிபாவிற்கு நீதி கேட்டும், கற்பழிப்பில் ஈடுபட்ட பாஜக MLA உட்பட அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க கோரியும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் பல்வேறு பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நாளை(21/04/2018) மாலை 4மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கண்டன உரையாற்ற TNTJ பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் வருகை தருகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.