அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர். இதனால், அஅரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக தங்கநாணயம் வழங்க முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை புதிதாக சேர்ந்த 15 மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது.அதேபோல், பெற்றோருக்கும் ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்த்தை ஏற்படுத்தியுள்ளது.