Home » தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!  

தமிழக மீனவர்களை மீட்டு படகின் இன்ஜினை சரிபார்த்து கொடுத்த பாகிஸ்தான் கடலோர படை!!  

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் மீட்டு நெகிழவைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் 9 நாட்களாக தவித்துள்ளனர். இதனிடையே அந்தவழியாக வந்த பாகிஸ்தான் கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகை சோதனையிட்டு, அவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படையின் ட்விட்டர் பக்கத்தில், ‘ஏடன் வளைகுடா பகுதியில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த அலிம்கர் படகு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலில் உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டது. சோதனை நடத்தியதில் செயிண்ட் மேரி என்ற பெயர் கொண்ட அந்தப் படகில் குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வந்தது தெரிய வந்துள்ளது’ என பதிவிடப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter