அதிரை அருகே தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்! (தாக்குதல் விடியோ இணைப்பு)
மஞ்சவயல் கலவரத்தில் பலியான இருவரின் உடல்களை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல காவல்துறையினர் தமுமுகவின் உதவியை நாடியுள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அதிரை மற்றும் பட்டுக்கோட்டை கிளைகளுக்கு சொந்தமான இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இரண்டு பேரின் உடல்களையும் எடுத்துக்கொண்டு மஞ்சவயலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது காவலரின் சொல்படியே ஓட்டுநர் பட்டுக்கோட்டை தமுமுக ஆம்புலன்சை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து ஓட்டுநர் மீது கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து தமுமுக சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாதி, மதம் பார்க்காமல் மனிதாபிமான சேவையை செய்து வரும் மனிதரை காவலர்கள் இருக்கும்போதே தாக்குவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.