Thursday, April 18, 2024

ஊழல் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!

Share post:

Date:

- Advertisement -

ஊழல் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சி.எம்.எஸ். இந்தியா நிறுவனம், “ஊழல் ஆய்வு 2018” என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு குறித்து சி.எம்.எஸ். இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த அலோக் ஸ்ரீவஸ்தா கூறுகையில், “நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது தொிய வந்துள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தெலங்கானா, 4வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துகின்றன.
குறிப்பாக போக்குவரத்து, காவல்துறை, வீட்டு வசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில் ஊழல் அதிகமாக நடப்பது தொியவந்துள்ளது. ஆதாா் அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 7 சதவீத மக்களும், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக 3 சதவீத மக்களும் தொிவித்துள்ளனா்” என்றார்.

Source:- NewsTm | தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...