எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது.
அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் இவ்விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.