தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள நடுத்தெரு அதிகமான பொதுமக்கள், குழந்தைகள் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடுத்தெரு கீழ்புறத்திலுள்ள மின் இணைப்பு எண் 745 D section மின்கம்பத்தில் உள்ள இரும்பு பொருள் துருப்பிடித்து எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் நிலையில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் இவ்வழியாக செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர்.
இந்த தெரு வழியாகத்தான் மின்னோட்டம் செல்கின்றது. அதன் காரணமாக மின் கம்பிகள் மிக தாழ்வாக தொங்குகின்றன.எனவே அது அதிகமான குழந்தைகள் விளையாடக்கூடிய முக்கியமான பகுதியாக இருப்பதால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் அதிரை மின்வாரிய அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விஷயத்தில் அதிரை மின்வாரியம் அலட்சியம் காட்டினால் எந்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் அதற்கு அதிரை மின்வாரியத்தையே சாரும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.