Thursday, March 28, 2024

அதிரையில் பெருகி வரும் போலி மருத்துவர்கள்! உஷார்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் சமீப காலமாக போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிரை மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களிலும் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை என்பது பெருகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் சொல்லும் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்ட காலம் போய் , பொதுமக்கள் மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனை இன்றி மருந்து வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிரையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் ஊர் முழுவதும் பரவியது. அதிரையை சேர்ந்த சிறுவர் உட்பட பலர் டெங்குவால் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து அதிரையில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட அதிரடி ரெய்டில் போலி மருத்துவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். மேலும் சில போலி மருத்துவர்களும் , மருந்தகங்களும் ரெய்டுக்கு அஞ்சி ஊரை காலி செய்த சம்பவங்களும் அரங்கேறியது.

அதிரையில் சில மருந்தகங்களில் நோயாளிகளுக்கு சட்டவிரோதமாக ஊசிகள் போடப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றனர் மற்றும் அதிரையை சுற்றியுள்ள கிராமங்களிலும் நாட்டு வைத்தியம் என்னும் பெயரில் மருந்துகளும்,ஊசிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி மருந்தகங்கள் மருத்துவரின் சீட் இல்லாமல் பொதுமக்களுக்கு ஊசிகள் வழங்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரையிலும் , சுற்றுவட்டார கிராமங்களிலும் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...