Home » டை பிரேக்கரில் KSC காயல்பட்டினம் வெற்றி!

டை பிரேக்கரில் KSC காயல்பட்டினம் வெற்றி!

by admin
0 comment

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் நாளான இன்று KSC காயல்பட்டினம் – ஜாலி பாய்ஸ் கோயம்புத்தூர் அணிகள் மோதின.

இருவரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய போதும் இரு அணியினராலும் கடைசி வரை கோல் ஏதும் போடமுடியவில்லை.

ஒரு பக்கம் கரு மேகம் மைதானத்தில் சூழ அதற்கு ஈடு கொடுத்து காற்றும் தூறலோடு அடிக்க ஆட்டம் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டு டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இந்த டைபிரேக்கரில் KSC காயல்பட்டினம் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஜாலி பாய்ஸ் கோயம்புத்தூர் அணியை வீழ்த்தியது.

நாளைய தினம் முதல் காலிறுதி ஆட்டமாக இன்று வெற்றி பெற்ற KSC காயல்பட்டினம் அணியும் – நேற்று வெற்றி பெற்ற வேலங்குடி அணியும் மோத உள்ளனர்.

 

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter