உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின.
இந்தியா முழுவதும் இன்று இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் பலதரப்பட்ட அதிரையர்களும் தங்களது பெருநாள் புகைப்படங்களை செய்தி ஊடகங்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ன் செய்தி நிருபர்களான அஹமது அஷ்ரஃப், அப்துல் வஹாப், ஃபாய்ஜ் அஹமத், இர்ஷாத் அஹமத், அஃப்ரித், அன்சர்தீன், இம்ரான் ஆகியோர் ஒன்றாக சந்தித்து தங்களது பெருநாள் வாழ்த்தை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பரிமாறிக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
அதை போன்று சாலிஹ், ஹஸன், கலீஃபா,அசாருதீன் , ஜிஃபிரி ஆகியோர் புகைப்படம் எடுத்து அனுப்பினர்.