தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பண்ணவயலில் சாலை மறியல்.
பட்டுக்கோட்டை பேராவூரணி இடையே இணைக்கும் பிரதான சாலையாகும். பண்ணவயலில் இயங்கி வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியல்.சாலை அருகே இருக்கும் இந்த மதுபானக் கடையால் மது அருந்திவிட்டு வாகன விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர், மேலும் மது அருந்திவிட்டு வாகன ஓட்டிகளுக்கும்,பொதுமக்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிடவில்லை, மதுபானக்கடையை மூடினால் மட்டுமே போராட்டம் திரும்ப பெறுவோம் என்று அதிகாரிகளிடம் கூறி வருகின்றனர்.