Home » முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

முழு அடைப்பிற்கு மத்தியிலும் உயர்ந்த பெட்ரோல்,டீசல் விலை : பொதுமக்கள் அதிர்ச்சி!

0 comment

இந்தியா முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடக்கும் நிலையிலும் பெட்ரோல் , டீசல் விலையில் இன்றும் உயர்வு ஏற்பட்டுள்ளது.

விலை உயர்ந்தது.. இதுமட்டும்தான் பெட்ரோல் , டீசல் விலையில்கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டே உள்ளது. ஒரு பைசா கூட கடந்த சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையில் குறையவில்லை.

ஒரு பக்கம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. தினமும் பைசா கணக்கில் பெட்ரோல் , டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பெட்ரோல் , டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று பிரதமர் மோடி கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது. இன்று மீண்டும் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது. தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்த்தால் இன்னும் சில தினங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தொடவும் வாய்ப்புள்ளது.

இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்தது. டீசல் விலை 23 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.98 ஆகும்.

இந்நிலையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்விற்கு எதிராக இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter