திமுக முதன்மைச் செயலராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பதவியேற்றதை அடுத்து முதன்மை செயலாளர் பதவி காலியானது. பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கட்சியின் புதிய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் முதன்மை செயலாளராக பதவியேற்ற பின் முதன் முறையாக சொந்த ஊரான மன்னார்குடிக்கு வருகை தந்தார் டி.ஆர்.பாலு.
மன்னார்குடி வந்த அவருக்கு உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதிரை திமுகழக செயலாளர் இராம.குணசேகரன் , மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர்.செல்வம் , ஒன்றிய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மரைக்கா இத்ரீஸ் , மாவட்ட பிரதிநிதி பகுருதீன் ஆகியோர் டி.ஆர். பாலுவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.