பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்தது.
முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜவகர்பாபு , மயில்வாகணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த இத்தொடர் நேற்று நிறைவு பெற்றது. வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை SRM அணியினரும் சென்னை JIT அணியினரும் மோதினர். இதில் சிறப்பாக விளையாடிய SRM அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் சென்னை JIT அணியினரும், மூன்றாம் இடம் சென்னை ஹிந்துஸ்தான் அணியினரும், நான்காம் இடம் சத்யபாமா அணியினரும் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.