தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டு அழைப்பு பணி தீவிரம்.
வருகின்ற அக் 21 அன்று திருச்சியில் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டை SDPI கட்சி அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முதல் கிளை தொண்டரகள் வரை மாநாட்டிற்கான மக்களை சந்தித்து அழைத்து வருகின்றனர்.
நேற்று மல்லிப்பட்டிணம் நகரம் சார்பாக மாநாட்டிற்கு மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள்,தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் MTK பஷீர் அகமது, மருத்துவர் ஆனந்த பிரியன் ஆகியோரை சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.
இச்சந்திப்பில் மல்லிப்பட்டிணம் நகர தலைவர் பஹத், முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.