Tuesday, December 2, 2025

முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையிலேயே தேங்கிக்கிடக்கும் மழைநீர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெரு செல்லும் பிரதான சாலையில் மழைநீர் ஆங்காங்கே குட்டை போல் தேங்கிக்கிடக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன.

வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள் என அத்தியாவசிய நிறுவனங்கள் பல இச்சாலையில் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அதிரை பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய சாலையாகவும் இது இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை வாகனங்கள் இயக்குவதற்கு துளியும் தகுதி இல்லாததாக இருக்கிறது. ஏனெனில் சாலை முழுவதும் ஆங்காங்கே பள்ளம் விழுந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி பலநாட்களாக அப்படியே கிடக்கிறது. இதனால் தொற்று நோய் மற்றும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் இச்சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img