தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு, ஆய்வுக்காக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைளை எடுத்து வருகிறது
இதனால் தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சி, பேரூராட்சி ஊராட்சிகள் என அந்தந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
முன்னதாக போலியான நபர்கள் , தனியார் நிறுவனங்கள் அதிரையில் ஆய்வுகள் மேற்கொள்வதாக பரவி வரும் தகவல்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், அரசின் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு செல்லும் ஊழியர்களை அச்சமின்றி வீட்டுக்குள் அனுமதிப்பதற்கு அவர்களுக்கென அடையாள அட்டைகளை பேரூராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும்
முன்னதாக இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அச்சத்தை போக்க வேண்டும்
இனிவரும் காலங்களில் எந்த ஒரு ஆய்வாக இருந்தாலும், கணக்கெடுப்பாக இருந்தாலும் அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே மக்களை சந்திக்க ஊருக்குள் அனுமதிக்க வேண்டும்
இதனால் தேவையற்ற குழப்பங்கள் நீக்கப்படுவதுடன், அனைவருக்கும் அரசின் அறிவிப்புகள், சலுகைகள் தங்குதடையின்றி கிடைக்கும்
எனவே அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தேவையற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.