Friday, March 29, 2024

மல்லிப்பட்டினத்தில் நாற்றமடிக்கும் கூவம் உருவாக்க முயற்சியா?

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது.

சாக்கடை கழிவுகள், மீன் கழிவுகள்,ஐஸ் பிளாண்டிலிருந்து வெளியேறும் கழிவுகள்,குப்பை கழிவுகள் என ஒட்டு மொத்த குப்பை கிடங்காகவும்,கழிவு நீர் தேக்கும் பகுதியாகவும் இருக்கிறது IVC ஐஸ் பிளாண்ட் அருகே.

பொதுமக்கள், வாகன ஓட்டிகளும்,பெண்கள்,பள்ளி மாணவ,மாணவிகள் என பலரும் பயன்படுத்தும் பிரதான சாலையாகும்,இந்த கழிவுகளின் காரணமாக வெளியேறும் துர்நாற்றத்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் இருக்கும் கழிவுகளால் டெங்கு,மலேரியா,சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது.

இது குறித்து புளூ ஸ்டார் கடை உரிமையாளர் சுபுகான் நம்மிடம் தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் சுகாதர பணிகளை அரசு செய்தாலும் மல்லிப்பட்டிணத்திற்குட்பட்ட பகுதிகளில் எந்தவித சுகாதர பணிகளும் நடைபெறுவதில்லை, மேலும் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள IVC ஐஸ் பிளாண்ட் அருகே கழிவுநீர் செல்ல முறையான வடிகால்கள் இல்லை, இதனால் கழிவுகள் அங்கேயே தேங்கி கிடந்து சுகாதர சீர்கேட்டையும்,துர்நாற்றம் வீசுகிறது.ஆகவே இதனை உடனடியாக அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...