Tuesday, December 2, 2025

அதிரையில் சாலை மறியல்., குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக தீர்மானம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கஜா புயல் கோரதாண்டவம் ஆடியது அனைவரும் அறிந்ததே. இதனால் தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். டெல்டா மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து தவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு தன்னார்வல அமைப்புகளும், சென்னை போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தங்களின் சிறிய தொகையை கொண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு நிவாரணங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டது.

அதில், வீடுகளை இழந்த மற்றும் பாதிப்பிற்குள்ளலான பொதுமக்களுக்கு வங்கியின் மூலம் அரசின் நிவாரணமாக பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

ஆனால், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெரு மற்றும் மாரியம்மன் கோவில் தெரு வாசிகளின் வங்கியில் பணம் வரவில்லை என்றும், அரசின் நிவாரண பொருட்கள் சரிவர வழங்கவில்லை என்றும் பொதுமக்கள் இன்று(27/12/2018) பகல் 12மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

நிவாரண பொருட்களை சரியான முறையில் சேராத காரணத்தால் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், இந்த சாலை மறியல் நிவாரணம் வழங்கும் வரை தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி, இதற்கான சரியான நடவடிக்கை இல்லையெனில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய குடும்ப அட்டைகளை திருப்பிக்கொடுக்கும் போராட்டம் நடத்துவதாகவும் கூறினர்.

வீடியோ இணைப்பு:-

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img