Tuesday, December 2, 2025

அதிரையில் திருமண விழாவில் மணமக்களின் சார்பில் இலவச மரக்கன்றுகள் விநியோகம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(28/12/2018) மு.செ.மு. யூசுப் அவர்களின் மகனாரின் திருமண விழா இன்று நடைபெற்று முடிந்தது.

இந்த திருமணத்தில் பசுமையை பரப்பும் வகையில் திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கடந்த மாதம் கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, பசுமையான காற்றை கொடுத்த மரங்களையும் இழந்தனர்.

இந்நிலையில், திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்த இந்த சம்பவம் மீண்டும் பசுமையை நிலைநாட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் அமைத்தது.

இந்த நிகழ்வின் மூலம் அதிரையில் ஓர் புதுமையான பசுமை புரட்சியை நிலைநாட்டி உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img