தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(28/12/2018) மு.செ.மு. யூசுப் அவர்களின் மகனாரின் திருமண விழா இன்று நடைபெற்று முடிந்தது.
இந்த திருமணத்தில் பசுமையை பரப்பும் வகையில் திருமண விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
கடந்த மாதம் கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி, பசுமையான காற்றை கொடுத்த மரங்களையும் இழந்தனர்.
இந்நிலையில், திருமண விழாவிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் கொடுத்த இந்த சம்பவம் மீண்டும் பசுமையை நிலைநாட்டவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல் அமைத்தது.
இந்த நிகழ்வின் மூலம் அதிரையில் ஓர் புதுமையான பசுமை புரட்சியை நிலைநாட்டி உள்ளனர்.