தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டமன்றத்தில் தனது உரையை தமிழில் தொடங்கினார்.
ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்” என்றார்.
இதற்கிடையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கஜா புயல் நிவாரணம், சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், ஸ்டெர்லைட் உள்ளிட்டவை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக தி.மு.க – காங்கிரஸ் கட்சியினர்
தெரிவித்தனர்.