தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் நகர SDPI கட்சி நிர்வாகிகள் பேராவூரணி அமமுக ஒன்றிய கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வத்தை இன்று(மார்ச் 15) சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் SDPI கட்சி கூட்டணி வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது.இதனையொட்டி இன்று வருகை தந்த ஒன்றிய கவுன்சிலர் கள்ளம்பட்டி செல்வத்திற்கு SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகர தலைவர் அப்துல் பகத்,நகர செயலாளர் ஜவாஹிர்,அஸ்கர் ஆகியோர் சந்தித்து சால்வை போர்த்தினர்.இச்சந்திப்பில் SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகர துணை தலைவர் ரஃபிக்,நகர ஊடக பொறுப்பாளர் முகமது அசாருதீன்,நகர பொருளாளர் ஹாரிஸ்,கிளை தலைவர் இபாத்,கிளை பொருளாளர் அசாருதீன், நிர்வாகிகள் முசம்மில்,ரஜாக்,சாதிக்,யூசுப் அமமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி AHR.ஹமீத்,கிளை செயலாளர் அப்துல் கஃபார்,அயூப்கான் பொறியியல் அணி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.